உண்மையை போட்டு உடைத்த ரமேஷ் கண்ணா ; திகைத்துப்போன விக்ரம்-ஹரி…!


சுமார் 15 வருடங்கள் கழித்து சூப்பர்ஹிட் படமான சாமியின் இரண்டாவது பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.. படத்தில் விக்ரம் இன்னும் சில முக்கிய பாத்திரங்கள் தவிர்த்து புதிய நட்சத்திரங்கள் இதில் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக த்ரிஷா இந்தப்படத்தில் இல்லை.. அதற்கு பதிலாக, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்..

த்ரிஷா ஏன் இதில் இல்லை, அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷை எப்படி கதைக்குள் சேர்த்திருப்பார்.. இதில் கீர்த்தி சுரேஷின் ரோல் என்ன என சில சஸ்பென்ஸ்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளன.

படம் வெளியாகும் வரை அந்த ரகசியத்தை காக்கவேண்டும் தானே.. ஆனால் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா பேசசுவாக்கில் சில விஷயங்களை உளறிக்கொட்டி வீட்டா இயக்குனர் ஹரியும் விக்ரமும் திகைத்து போனார்கள். பின் ரமேஷ் கண்ணாவுக்கு சிக்கினால் கொடுத்து அவரை ஆப் செய்தனர்..

ரமேஷ் கண்ணா அப்படி என பேசினார் என்கிறீர்களா..? இதோ கேளுங்கள்.. “சாமி படத்திற்குப்பின் விக்ரமுடன் இப்போது தான் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்.. விக்ரம் அப்போது பார்த்ததுபோலவே இப்போதும் இருக்கிறார்.. அவருக்கு மட்டும் இளமையான வேடம் கொடுத்துவிட்டு எனக்கு வயதான வேதத்தை கொடுத்துவிட்டார்கள்.. கேட்டால், நீங்க அவரோட அப்பா செட்டு என சொன்னார்கள் ” என பேசிக்கொண்டே சென்றவரைத்தான் சிக்கினால் கொடுத்து தடுத்து நிறுத்தினார்கள் ஹரி-விக்ரம் இருவரும்.

ரமேஷ் கண்ணா சொன்னதன் மூலம் இந்தப்படத்தில் விக்ரம் அப்பா-மகன் என டபுள் ஆக்சன் ரோலில் நடிக்கிறார் என்கிற புதிய உண்மை வெளியே வந்துள்ளது.