விஷால் படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் மறுத்தது ஏன்..?


என்னதான் நடிகர்சங்க பொறுப்பில் இருந்தாலும் நம்ம படத்துக்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் வந்து இசையமைப்பாரா என்ன என்கிற ஆதங்கம் விஷாலுக்கு நிறையவே இருக்கிறதாம்.. சரி ஏ.ஆர்.ரஹ்மான் கிடைக்காவிட்டால் போகிறது, ரஜினி, விஜய் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் நம் படத்திற்கு இசையமைத்தால் அது கூட திருப்திதான் என விஷால் எண்ணியதிலும் ஆச்சர்யமில்லைதான்.

அதன்படி சமீபத்தில் விஷாலை வைத்து படம் இயக்க ஓகே வாங்கிய இயக்குனரிடம் சந்தோஷ் நாராயணனை இசையமைக்க கேளுங்கள் என கூறி அனுப்பி வைத்தாராம் விஷால்.. இயக்குனரும் தயாரிப்பாளரும் சந்தோஷ் நாராயணனிடம் பேச ஒன்றரை கோடி ரூபாய்க்கு குறைய மாட்டேன் என பிடிவாதமாக நின்று விட்டாராம் இசை..

வேறு வழியின்றி தயாரிப்பாளரும் சம்மதிக்க, அதன் பின் கதையைக்கேட்டுள்ளார் இசை. ஆனால் கதை சுத்தமாக பிடிக்கவில்லையாம் இசைக்கு.. அதனால் இந்தப்படத்தில் இசையமைக்க முடியாது என விஷாலிடம் போனில் சொல்லிவிட்டாராம்.

இன்னும் கொஞ்சம் பேட்டா அதிகமாக எதிர்பார்க்கிறார் போல அதற்கும் இறங்கி வந்தாராம் விஷால்.. ஆனால் காசு ஒரு பொருட்டல்ல, கதை உண்மையிலேயே எனக்கு பிடிக்கவில்லை, முடிந்தால் கதையை சரிசெய்ய பாருங்கள், இல்லையென்றால் படத்தில் இருந்து நீங்களும் விலகிவிடுங்கள் என கூறிவிட்டாராம் இசை.