ஹீரோயினுடன் நெருங்கி பழகமுடியாமல் சிம்புவுக்கு விழுந்த முட்டுக்கட்டை..!


ஒகே.. கௌதம் மேனன் படம் மீண்டும் கேரியரை தூக்கி நிறுத்த உதவும் என்கிற எண்ணத்தில் தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்க ஒப்புகொண்டாராம் சிம்பு.. படத்தின் கதாநாயகி பிக்ஸ் ஆகும் வரை கதாநாயகி இல்லாமல் சிம்பு நடிக்கும் காட்சிகளாகத்தான் எடுக்கப்பட்டனவாம்.. அதனால் படப்பிடிப்பில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் லேட்டாக வருவது, இல்லையென்றால் திடீரென லீவு போட்டு டிமிக்கி கொடுப்பதுமாகத்தான் இருந்தார் சிம்பு..

கௌதம் மேனனே கூட ஒரு கட்டத்தில் என் பட ஹீரோ லேட்டா வருகிறார்.. அப்புறம் எங்கே சொன்னா நாளில், சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிப்பது என பொதுமேடையிலேயே புலம்பிய நிகழ்வும் நடந்தது.. இதேல்லாம கதாநாயகியாக மலையாளக்கிளி மஞ்சிமா மோகன் வரும் வரைதான்..

ஆனால் அவருடனான காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட ஆரம்பித்ததும் ஷார்ப் டயத்துக்கு வர ஆரம்பித்தாராம் சிம்பு..படப்பிடிப்பில் கிடைக்கும் சின்னச்சின்ன இடைவெளிகளில் கதாநாயகியை கவர் பண்ணலாம் என்பதுதான் அவரது நேரந்தவறாமைக்கு காரணமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அந்தோ பரிதாபம்.. சிம்புவின் ஆசைக்கு எதிர்பாராத கோணத்தில் இருந்து முட்டுக்கட்டை வந்து விழுந்தது. அந்த முட்டுக்கட்டையின் பெயர் நாக சைதன்யா.. ஆம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறதல்லவா..?

இதில் தெலுங்கு பதிப்பில் ஹீரோவாக நடிக்கிறார் நாக சைதன்யா.. இரண்டு மொழிகளுக்குமான காட்சிகள் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருவதால், சிம்புவுடனான காட்சி எடுக்கப்பட்டதும் அடுத்து நாகசைதன்யாவுடன் எடுக்கப்படும் அதே காட்சிக்கு மஞ்சிமா தயாராக வேண்டும்.

அதனால் மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி கடலை போடும் வாய்ப்பு சிம்புவுக்கு கிடைக்கவே இல்லையாம். அப்படியே மஞ்சிமா ஓய்வாக இருந்தாலும் கூட நாகசைதன்யாவும் இருந்ததால் அடக்கி வாசிக்க வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டாரம் சிம்பு. ஆக மஞ்சிமா மோகன் எப்படியோ எஸ்கேப் ஆகிவிட்டார்.