பாதுகாப்பை உறுதி செய்த உதயநிதி ; ரிஸ்க் எடுக்கும் அருள்நிதி..!


இதுவும் விஷால் அறிவித்துள்ள போராட்டம் தொடர்புடைய செய்தி தான். நாளை மறுதினம் (மே-12) உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியுள்ளதாளும் ‘புஷ்பா புருஷன்’ சூரி நடித்துள்ளதாலும் இந்தப்படமும் ‘வேலைன்னு வந்துடா வெள்ளக்காரன்’ போல காமெடிக்கு நூறு சதவீதம் கியாரண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

தவிர விஷால் அறிவித்துள்ள போராட்ட தேதிக்குள் சுமார் 19 நாட்கள் இடையில் இருப்பதால் பாதுகாப்பாக தப்பித்தும் விடும். ஓரளவு வருமானமும் பார்த்துவிடும்.. அதேசமயம் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘பிருந்தாவனம்’ படம் வரும் மே-26ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் விஷால் அறிவித்துள்ள போராட்டம் இந்தப்படத்தின் தொடர் ஓட்டத்தை பாதிக்காதா, அல்லது மே-3௦க்குப்பின் வரும் படங்கள் தான் தியேட்டர்களில் ரிலீசாகாது என்பதால் ‘பிருந்தாவனம்’ படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ரிஸ்க் எடுக்கிறார்களா..? இல்லை இந்த போராட்டமே நடக்காது என முடிவு கட்டை விட்டார்களா.? இல்லை இந்த போரட்டத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா என்பது அருள்நிதிக்கே வெளிச்சம்..

உதயநிதி பாதுகாப்பான ஆட்டம் ஆட, அருள்நிதி மட்டும் ரிஸ்க் எடுகிராரோ என்றுதான் சொல்ல தோன்றுகிறது.