வாய் திறக்காத விக்ரம்.. வாயை பிளந்த தனுஷ் ; ‘அப்பா’ நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!


சமீபகாலமாக அப்பா நடிகர்கள் பட்டியலில் புதிதாக தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் நடிகர் வேல ராமமூர்த்தி.. கொம்பன், கிடாரி, பாயும் புலி, சேதுபதி என படத்துக்குப்ப்டம் வித்தியாசம் காட்டி நடித்துவரும் வேல ராமூர்த்தி தற்போது விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ மற்றும் தனுஷுக்கு தந்தையாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஜெயம் ரவியின் தந்தையாக வனமகன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுடன் நடித்தபோது, படக்காட்சிகளில் நடிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வேல ராமமூர்த்தியிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லையாம் விக்ரம்.. அதேபோல ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றபோது ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வரும் தனுஷ் எல்லோரயும் பார்த்து பரபரப்பாக ஹாய் சொல்லிவிட்டு போவாராம்..

ஷூட்டிங்கில் நடிக்கும்போது மட்டும் தான் அன்னியோன்யமான அபா மகனாக நடிப்பார்களாம் வேல ராமமூர்த்தியும் தனுஷும்.. அந்தப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்து கிடாரியில் நடிக்கப்போனார் வேல ராமமூர்த்தி. அதன்பின் கிடாரி படம் ரிலீசான பின் தான் மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா’ படபிடிப்பில் தனுஷுடன் கலந்துகொண்டாராம் வேல ராமமூர்த்தி.

அப்போது ‘கிடாரி’ படம் பார்த்துவிட்ட தனுஷ் வேல ராமமூர்த்தியின் நடிப்பை கண்டு மிரண்டு போய்விட்டாராம். இப்படி ஒரு ஆளுடன் தான் நாம் இதுநாள் வரை நடித்து வருகிறோமா என திகைத்து போய்விட்டாராம். அதனால் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேல ராமமூர்த்தியை சந்தித்தபோது தானே வலியவந்து, “ஸார்.. கிடாரி பார்த்தேன்.. சான்சே இல்ல.. கலக்கிட்டீங்க” என புகழ்ந்து தள்ளிவிட்டாராம். அதன்பின் வேலராமமூர்த்தி குறித்த தனுஷின் பார்வை ரொம்பவே மரியாதையாக மாறிப்போனதாம்.