“தம்பி.. விஜய் டயலாக் விஜய் படத்தில் தான் இருக்கணும்” ; அலெர்ட்டான தாணு..!


நையப்புடை படத்தை பற்றி கசிந்த இன்னொரு பரபரப்பு தகவல் தான் இதுவும். 75வயது எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்துள இந்தப்படத்தை 19 வயது இளைஞரான விஜய்கிரண் என்பவர் இயக்கியுள்ளார்.. படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டிரைலரில் எஸ்.ஏ.சியின் வற்புறுத்தலின்பேரில் ஒரு சர்ச்சைக்குரிய வசனம் இணைக்கப்பட்டுள்ளதாம். அதாவது “ஒரு தமிழன் தான் நாட்டை ஆள போறான். அவன் வந்துகிட்டே இருக்கான். இனி அடுத்து தமிழன் ஆட்சிதான்” என்ற வசனம் வருகிறது போல முதலில் தயாரானதாம்.

இது அப்படியே விஜய்யை குறித்து பேசப்படுகின்ற வசனம் என்பது பச்சைக்குழந்தைக்கு கூட தெரியும்போது தயாரிப்பாளர் தாணுவுக்கு தெரியாமல் போய்விடுமா..? அடுத்த வாரம் வெளியாகும் ‘நய்யப்புடை’ படத்துக்கு இதனால் சிக்கல் வருவது ஒருபுறம் இருக்க, தனது தயாரிப்பில் உள்ள ‘தெறி’, ‘கபாலி’ படங்களிலும் இந்த தேவையில்லாத பஞ்ச் டயலாக் உள்ளே நுழைந்து கும்மியடித்துவிடும் என்பதால் ஜெர்க் ஆனாராம் தாணு.

அதனால் அந்த இயக்குனர் இளைஞனை அழைத்து “தம்பி.. விஜய் டயலாக் விஜய் படத்தில் தான் இருக்கணும்.. அப்படி தேவைப்பட்டால் அதை நான் ‘தெறி’ படத்தில் வைத்துக்கொள்கிறேன்.. இதுல எல்லாம் வேணாம்.. தூக்கிரு” என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம்.