ரஜினியிடம் கௌதம் மேனனை நெருங்கவிடாமல் தடுத்த அந்த நல்லவர் யார்


கபாலி, காலா என ரஞ்சித்துடன் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்றிவிட்ட ரஜினி, தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இந்தநிலையில் துருவ நட்சத்திரம் கதையில் ரஜினி நடிக்க இருந்தார் என கவுதம் மேனன் ஒரு தகவலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தாணு மூலமாக துருவ நட்சத்திரம் கதையை ரஜினியிடம் சொன்னேன். கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடித்து போனது. படம் எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு நாள் கால்ஷீட் வேண்டும், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என கேட்டார். படம் பண்ணலாம், யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் வீட்டில் மட்டும் வேண்டுமானால் சொல்லுங்க என்று கூறி சந்தோஷமாக எங்களை அனுப்பி வைத்தார்.

நான் எனது குழுவுடன் படம் பற்றி திட்டமிட்டு கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை தாணு சார் போன் செய்து ரஜினியிடம் யாரோ எதையோ சொல்லிட்டாங்க, படம் இப்போது வேண்டாம் என கூறிவிட்டார் என்றா. ஒருவேளை என்னை பிடிக்காத நல்லவர்கள் யாரோ, எதையோ சொல்லியிருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. அதன்பின் தான் ரஞ்சித் பட அறிவிப்பு வெளியானது.. அதனால் ரஜினியுடன் இணைந்து படம் பண்ண முடியாமல் போனது. என கவுதம் மேனன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கௌதம் மேனன் ரஜினியுடன் இணைந்து படம் பண்ணிவிட கூடாது என தடுத்த அந்த நல்லவர் யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான கோலிவுட் டாக்.