வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடன் நிச்சயம் நடிப்பேன் – விஜய் சேதுபதி


தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தி போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வரும் போதே வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மாமனிதன், கடைசி விவசாயி,யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

இதையடுத்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.