தாய்மார்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும்! – ’அரண்மனை 3’ படம் பார்த்தவர்கள் பாராட்டு

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படத்தை ரிலீஸுக்கு முன்பாக வாய்ப்பு கிடைத்தவர்கள், படம் குறித்து வெகுவாக பாராட்டியிருப்பதோடு, படத்திற்கு தாய்மார்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். அரண்மனை 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம். பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம். ஆனால், ’அரண்மனை 3’ திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாப்பாத்திரத்தை விட ’அரண்மனை 3’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். ஆர்யாவின் சினிமா கேரியரில் ’அரண்மனை 3’ ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், யோகி பாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியிருப்பதாகவும், தியேட்டரில் ரசிகர்கல் வயிக்று குலுங்க சிரித்து திரையரங்கையே அதிர வைக்கப்போவது உறுதி, என்றும் கூறுகிறார்கள்.

அரண்மனை சீரிஸ் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, ‘அரண்மனை 3’ படத்தில் பல முக்கியமான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதேபோல், தனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, இந்த படத்தில் அதை கூடுதலாக செய்திருக்கிறாராம்.

மொத்தத்தில், ‘அரண்மனை 3’ திரையரங்கில் பார்க்கும் படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும் படமாகவும் நிச்சயம் இருக்கும், என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.