‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது!

மிகபிரமாண்டமான வெற்றிபெற்ற ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது!

Hand Made Films சந்தானம் நடித்து, தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.