கண்ணதாசா.. ஜேசுதாஸா..? வடிவேலு பாணியில் குழம்பிய ரஜினி வாரிசு..!

‘கோச்சடையான்’ படத்தின்போதே சௌந்தர்யாவின் தொழில்நுட்ப மற்றும் கிரியேட்டிவ் திறமையை பார்த்து வியந்த ஈராஸ் நிறுவனம் சரியான தருணத்தில் அவருக்கு தென்னிந்திய சி.இ.ஓ பதவியை வழங்கியது. ‘கோச்சடையான்’ லாப நட்ட கணக்கை சரிக்கட்டுவதற்காகவும் இந்தப்பதவி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஆடியோ ரைட்ஸ், படங்களின் ரைட்ஸ் ஆகியவற்றை வலைவீசி ஈராசுக்கு இழுத்து வந்ந்து விடுகிறார். சௌந்தர்யாவின் செயல்பாடுகளும் ஈராஸுக்கு ரொம்பவே திருப்தி தருவதாகத்தான் இருக்கின்றன..

ஆனால் சமீபத்தில் பிசினஸ் பேசப்போகிறேன் என்று போன இடத்தில் கண்ணதாசா.. ஜேசுதாஸா..? வடிவேலு பாணியில் குழம்பி போய்விட்டார் சௌந்தர்யா. விஷயம் ஒன்றுமில்லை. கமலின் உத்தம வில்லினை ஈராஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. அந்தவகையில் கமல் நடித்துள்ள ‘பாபநாசம்’ படத்தையும் வாங்கிவிடலாம் என்பது அவரின் திட்டம்..

சமீபத்தில் தனது அப்பாவின் நண்பரான ஆனந்தா பிக்சர்ஸ் எல் சுரேஷ் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த சவுந்தர்யா, என்ன அங்கிள்… பாபநாசம் படம் முடிஞ்சுருச்சுன்னு கேள்விப்பட்டேன். இன்னும் பிசினஸ் பேசலையா? நீங்க சரின்னா நம்ம ஈராஸ்ல பேசலாமே என்று கேட்க,.ஷாக் ஆனாராம் ஆனந்தா எல்.சுரேஷ்.

ஏனென்றால் அந்தப்படத்தை தயாரிப்பது இவர் இல்லை அவர் மறைந்த நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தான். சுரேஷ் என்றதுமே அது இவர் தான் என தப்பாக நினைத்துக்கொண்டு பிசினஸ் பேசிய சௌந்தர்யாவுக்கு பெயர் மாறிய விஷயத்தை கூற, அசடு வழிந்தாராம் சௌந்தர்யா.