வரம் கேட்ட ஸ்ரீ பக்தை ; தர மறுத்த சிவன்..!

வருத்தப்படாத நாயகி கைவசம் இப்போது நான்கு படங்கள் இருக்கின்றன. பார்த்தால் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பது போலத்தான் தெரியும். ஆனால் பரதேசி மற்றும் டார்லிங்குடன் நடித்துவரும் படங்களில் இவரது வேலைகள் முடிந்துவிட்டன. மலையாள ரீமேக்கில் நடித்துவரும் படத்திலும் இவரது படப்படிப்பு முடிந்துவிட்டதாக கேள்வி.

அடுத்து கைவசம் இருப்பது சிறுத்தை நாயகனும் தெலுங்கு ஹீரோ ஒருவரும் இணைந்து நடிக்கும் பேய்ப்படம் தான். அதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து வருத்தப்படாத நாயகிக்கு பட வாய்ப்பு எதுவும் தேடி வராததால், வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தான் ஏற்கனவே இரண்டுமுறை இணைந்து நடித்த சிவனிடம் தனக்கு அவரது படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கும் வரம் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்திருக்கிறார். மூன்றாவது படத்திலும் சேர்ந்து நடித்தால் தேவையில்லாத கிசுகிசுவில் மாட்டுவோம் என்பதாலும், அடுத்தடுத்து ஹைடெக் ஹீரோயின்களை தேடிப்போவதாலும் இவருக்கு வரம் தர மறுத்துவிட்டாராம் சிவன்.