பிரபுவை கிண்டலடித்த தொகுப்பாளர் ; டென்சன் ஆன சேரன்


இப்போதெல்லாம் இசைவெளியீட்டு விழாவோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்போ எதுவானாலும் அந்த நிகழ்வின் தொகுப்பாளர்களை கண்டாலே அலறுகிறார்கள் பத்திரிகையாளர்களும் ரெகுலராக விழாக்களில் கலந்து கொள்ளும் சினிமா பிரபலங்களும்.. அந்த அளவுக்கு மொக்கை, படு மொக்கை, சூர மொக்கை என தொகுப்பாளர்கள், குறிப்பாக தொகுப்பாளினிகள் பேசுகிறேன்…. பேசுகிறேன் என டெரர் காட்டுகிறார்கள்.. ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு..

சில தினங்களுக்கு முன் அதாவது புத்தாண்டு அன்று, சினிமா பத்திரிக்கை தொடர்பாளர் சங்கம் நடத்திய விருது வழங்கும் விழாவில் இரண்டு அமெச்சூர் தொகுப்பாளர்கள் (அதில் ஒரு தொகுப்பாளினியும் அடக்கம்) மேடைக்கு வந்த வி.ஐ.பிக்களிடம் தத்து பித்துவென கேள்விகளை கேட்டு வந்தவர்களையும் பார்வையாளர்களையும் சங்கடப்படுத்தி விட்டார்களாம்.

குறிப்பாக பிரபு, விக்ரம் பிரபு இருவரும் மேடைக்கு வந்தபோது தொகுப்பாளர், பிரபுவை பார்த்து உங்கள் உடம்பை குண்டாக வைத்திருக்கும் உங்கள் சீக்ரெட் என்ன என்றெல்லாம் நாகரிகம் இல்லாமல் கேட்க, பிரபு ஏதோ சிரித்து மழுப்பி அமைதியாக போய்விட்டார்.

ஆனால் பின்னால் வந்த சேரன் அந்த தொகுப்பாளர்களிடம், “பிரபு யார் என்பது தெரியுமா, அவரது தந்தையை பற்றி தெரியுமா, அவர்களது குடும்ப பாரம்பரியம் பற்றி தெரியுமா..? அவர்களது கலைப்பயணத்தை பற்றி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன கேட்பதற்கு.. அதைவிடுத்து இனிமேல் இப்படி அநாகரிகமாக கேள்வி கேட்காதீர்கள். இந்த புத்தாண்டு தினத்தில் இருந்து இதை கடைபிடியுங்கள்” என செமத்தியாக டோஸ் விட்டார்..