“பொல்லாத பொண்ணுப்பா இது” ; டைரக்டரை திணறவைத்த கணிதன் நாயகி..!


கடந்த இரண்டு வருடங்களில் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ‘மெட்ராஸ்’ நாயகி கேத்தரின் தெரசா.. தெலுங்கில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்துள்ள இவர் மீது ரசிகர்கள் யாருக்கும் வெறுப்பு எதுவும் தோன்றவில்லை.. மாறாக, மெட்ராஸ் படத்தில் பார்த்தபோதே அடடே நல்லா இருக்கே இந்தப்பொண்ணு என்று அப்போதே பாஸ்மார்க்.. இல்லையில்லை பர்ஸ்ட் மார்க் போட்டுவிட்டார்கள்..

இவரை கணிதன் படத்துக்காக ஒப்பந்தம் பண்ண போன இயக்குனர் டி.என்.சந்தோஷுக்கு விசித்திரமான அனுபவம் கிடைத்ததாம்.. காலையில் கதை சொல்லப்போனவர் மதியம் வரை கதை சொல்லியிருக்கிறார்.. மதியம் லஞ்ச் எல்லாம் கொடுத்து உபசரித்த கேத்தரின் தெரசா, மதியத்தில் இருந்து அரைநாள் இயக்குனரிடம் படம் மற்றும் கதை பற்றிய சந்தேகங்களை கேட்டுத்தள்ளிவிட்டாராம்.

அசந்துபோன இயக்குனர், யெப்பா.. பொல்லாத பொண்ணுய்யா இது, என மனதிற்குள் நினைத்துக்கொண்டே அத்தனை கேள்விகளுக்கும் விளக்கங்களை சொல்ல, அதன்பின்னரே படத்தில் நடிக்க சம்மதித்தாராம் கேத்தரின் தெரசா.