நயன்தாரா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் கிராமத்து இயக்குனர்..?


மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தை இயக்குனர் சற்குணம் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்கிறார். படத்தை இயக்குவதும் சற்குணத்தின் உதவியாளரான தாஸ் ராமசாமி தான்.

ஆனால் கதை சொல்லும்போது நன்றாக சொன்ன இயக்குனர், புதியவர் என்பதால் காட்சிகளை எடுக்கும்போது திணறுகிறாராம் இதனை பார்த்த நயன்தாரா ஏற்கனவே தனக்கு பேய்ப்படத்தில் நடித்த அனுபவம் இருப்பதாய் சுட்டிக்காட்டி, இப்படி டைரக்சன் பண்ணினால் நன்றாக இருக்கும் . என ஐடியா கொடுக்க ஆரம்பித்து விடுகிறாராம்.

இந்த விஷயத்தை படத்தின் இயக்குனர், சற்குணத்தின் காதுக்கு கொண்டு செல்ல, அவரும் “நயன்தாரா சொன்ன சரியாத்தான் இருக்கும்ப்பா.. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போப்பா” என கூறிவிட்டாராம். அதேபோல ஸ்பாட்டிற்கு வந்தபோது நயன்தாராவிடமும் இதைச்சொல்லி அவருக்கு முழு சுதந்திரமும் கொடுத்து விட்டாராம். எப்படியோ படம் முடிந்தால் போதும், நயன்தாரா பெயரை வைத்தே பிசினஸை முடித்துவிடலாம் என்பது சற்குணத்தின் கணக்காம்.