முதல்நாளிலேயே ஷூட்டிங்கிலேயே மொக்கை பண்ணியதால் கோபமாக வெளியேறிய வில்லன் நடிகர்..!


விசாரணை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய மொட்டைத்தலை நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது.. அந்த அளவுக்கு நிஜ போலீஸ் அதிகாரி போல தத்ரூபமாக நடித்திருந்த அவர்தான் தெலுங்கு நடிகர் அஜய்கோஷ். தற்போது ‘தப்புத்தண்டா’ என்கிற படத்தில் போலீசாக தனது மிரட்டலை தொடர்கிறார்.

இந்தப்படத்தில் இவர் நடிக்க ஆரம்பித்த அன்றே இவர் கோபப்ப்படும்படியான நிகழ்வு ஒன்று நடந்ததாம். முதல் நாள் ஷூட்டிங் காட்சியிலேயே க்ளைமாக்ஸ் போர்ஷனை எடுக்க நினைத்துள்ளார் டைரக்டர் ஸ்ரீகண்டன். அதன்படி அதில் அஜய்கோஷ் நடிக்கும் காட்சிகளை, அதாவது அவர் மொக்கை வாங்கும் காட்சிகளை படமாக்கினார்களாம்..

என்னடா இது முதல்நாளே தனது காட்சிகள் இப்படி இருக்கிறதே என டென்ஷனாகி கோபித்துக்கொண்டு கிளம்பி விட்டாராம் அஜய் கோஷ். அதன்பின் அவரை சமாதானப்படுத்தி அழைத்துவந்தார்களாம்.. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தனது காட்சிகளை படமாக்கும்போதுதான் படத்தில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டாராம் அஜய்கோஷ்.