ராஜ் டி.வி.யில் “சரவணன் மீனாட்சி” இயக்குனரின் அடுத்த தொடர் “காக்க காக்க”!

ராஜ் டி.வி.யில் இலங்கை, திருச்செந்தூரில் வளரும் மெகா தொடர் “காக்க காக்க”!

அரசன் சூரபத்மனை அழிப்பதற்காக தன் முழு சக்தியையும் ஒரு வேலுக்குள் அடக்கி, அதை தன் மகன் முருகனுக்கு வழங்குகிறார் அன்னை பார்வதி. முருகப் பெருமானின் கையிலிருந்த அந்த வேலுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாத, பல மர்மங்கள் கொண்ட சுவாரஷ்யமான கதைகள்.. அந்த கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் மெகா தொடர்தான் “காக்க காக்க”. இந்த மெகா தொடர் ராஜ் டிவி யில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இத்தொடரை டி.ஐ.பிலிம் கார்ப்பரேஷன் ஏராளமான பொருட் செலவில் தயாரிக்கிறது. திங்கட் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகிறது.

தீபா, சூசன், கமல், ஜீவா ரவி, எஸ்.வி.எஸ். குமார், அகில், கிஷன் ஆகியோர் இதில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: கோபால், டைட்டில் பாடல் இசை: ஹரி கிருஷ்ணன், டைட்டில் பாடல் பாடியிருப்பவர்: நித்யஸ்ரீ மகாதேவன்.

கதை, திரைக்கதை, வசனம்: ஜெய் கிருஷ்ணன்

அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் இத்தொடரின் இயக்குனர் அழகர். இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” வெற்றி தொடரை இயக்கியவர்.

திருச்செந்தூர், இலங்கையில் உள்ள கதிர்காமம், கொழும்பு ஆகிய இடங்களில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்றது.