மிர்ச்சி செந்தில் கைதும்!.. அதற்கான காரணமும்!

விஜய் டிவியின் “சரவணன் மீனாட்சி” தொடரின் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த மிர்ச்சி செந்தில், சமீபத்தில் அவர் வேலை பார்க்கும் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்திலிருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டது போல் ஒரு வீடியோ இணையத்தில் பரவியது.

அவ்வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைத்த பலரும் இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?, அவர் அப்படி என்ன செய்தார்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர் . இன்னும் ஒரு சிலர் வரதட்சணை கேட்டு அவர் தன் மனைவியை கொடுமை படுத்தியதாக வதந்திகளை கிளப்பிவிட்டிருந்தனர். தற்போது இதற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது மிர்ச்சி செந்தில், ரேடியோ மிர்ச்சியில் புதியதாக தொடங்கவிருக்கும் “சுட்ட கதை” என்ற நிகழ்ச்சியின் ப்ரோமோசனுக்காக நடத்தப்பட்டதாம் அந்த போலி கைது! அந்த வீடியோவை தான் அவர்களாகவே எடுத்து இணையத்தில் பரவவிட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தரும் விளக்கத்தை இந்த வீடியோவில் பாருங்கள்!