ஆபீஸிலேயே ‘அந்த’ வேலையும் பார்க்கும் அடேங்கப்பா இயக்குனர்…!


வில்லங்கமான இயக்குனர் என பெயர் எடுத்தவர் பாலிவுட் தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா.இவரது படங்கள் ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பும் என்றால், சமூகத்தில் உள்ள பிரபலங்கள் பற்றி இவர் அவ்வப்போது தெரிவித்துவரும் கருத்துக்கள் ரொம்பவே முட்டாள்தனமாகவும் சீப் பப்ளிசிட்டி தேடும் விதமாகவும் இருக்கும்.

இப்படிப்பட்ட மனிதருக்கு இன்னொரு சர்ச்சை மணிமகுடம் சூட்டுவதுபோல இன்னொரு காரியமும் செய்திருக்கிறார் வர்மா. அதாவது தனது அலுவலகத்தில் பல அறைகளை கட்டி வைத்துள்ளார்.. அதில் ஒவ்வொன்றுக்கும் நாகார்ஜுனா, மோடி, ஊர்மிளா, தாவூத் இப்ராஹீம் என பிரபலங்களின் பெயர்களாக வைத்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, ஒரு அறைக்கு டெவில் என்றே பெயர் வைத்துள்ளார். இந்த அறையில் மிகப்பெரிய படுக்கை ஒன்றையும் வடிவமைத்துள்ளார்.. இது எதற்காக என்றால் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதற்காகவாம். அந்த அலுவலகத்திற்குள் சென்றுவந்த சில நடிகைகளே இதுபற்றி கூறியுள்ளார்களாம்.. ராம்கோபால் வர்மாவும் இதை மறுக்கவில்லையாம்..

ஒரு நாளைக்கு வர்மாவை வச்சு செய்யப்போறானுங்க.. அன்னைக்கு இருக்கு மாப்ளே வேடிக்கை என்கிறார்கள் சிலர் விஷம சிரிப்புடன்..