தந்தை ‘கடல்புறா’.. மகன் ‘காட்டுப்புறா’.. இது எப்டி இருக்கு..?


சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் நடிகர் பாபு கணேஷ். தமிழில் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பது பலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. ஆனால் இருபது வருடங்களுக்கு முன் திரையுலகில் இவர் பண்ணிய அட்ராசிட்டிகள் அடடே ரகம்.. இவரை படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கி, நடித்து என எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருப்பார்.

படம் ஓடுகிறதோ இல்லையோ ஏதாவது ஒரு பரபரப்பை உண்டாக்கி கொண்டே இருப்பார். 1992ல் இவர் முதன்முதலில் நடித்து வெளியான படம் தன ‘கடல்புறா’.. இப்போது அதிசயமாக தனது மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படத்திற்கு தான் அறிமுகமான படத்தை ஞாபகப்படுத்துவது போல ‘காட்டுப்புறா’ என்கிற டைட்டிலை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்..