அந்த விஷயத்தில் வடிவேலு நடந்துகொண்டது சரிதான்..!


“எனக்கு வைக்க முடியாது ஆப்பு.. நான்தான் எப்பவுமே டாப்பு” வடிவேலு பேசும் பேச்சில் வேண்டுமானால் பந்தா தெரியலாமே தவிர, அவர் தனது சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை பழைய வடிவேளுவாகத்தான் இருக்கிறார் என்பதையே சமீபத்தில் நடைபெற்ற அவரது மகளின் திருமண நிகழ்வு எடுத்துக்காட்டியது.

கடந்த வருடம் நடைபெற்ற அவரது மகன் திருமணத்திற்கு ஏழைக்குடும்பத்தில் பெண் எடுத்ததாகட்டும், இந்த வருடம் தனது மகள்களின் திருமணத்தை சினிமாக்காரர்களை எளிமையாக அழைத்தது ஆகட்டும், வடிவேலு அவரது சொந்தக்காரர்களை பொறுத்தவரை அதே பழைய வடிவேலுதான் என்பதை ஒவ்வொரு முறையும் பறைசாற்றிக்கொண்டே வருகிறார்.

சினிமாகாரர்களை தனது வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தால் தனது சொந்த பந்தங்களாக உள்ள அப்பிராணி சொந்த பந்தங்களை எங்கே கவனிக்க முடியாமல் போய்விடுமோ, அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவர்களுக்கு ஏதும் மரியாதை குறைவு ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தே திரையுலகினரை அழைக்காமல் விட்டுவிட்டார் என்கிறார்கள் வடிவேலுவை நன்கு அறிந்தவர்கள்.. ஆக, அந்த விஷயத்தில் வடிவேல் நடந்துகொண்டது சரிதான் என்றே தோன்றுகிறது