ஹிட் கொடுக்குறவன் மட்டுமே டைரக்டர் இல்ல ; யாருக்கோ சூடு வைத்த பேரரசு..!


ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கியது இயக்குனர் பேரரசுக்கு. முதல் படமே ஹீரோ விஜய் என்றால், அடுத்த படத்திலும் விஜய்யை ஹீரோவாக்கிய இவரது சாதனையை வேறு இயக்குனர்கள் யாரும் செய்ததாக சமீபத்திய வரலாறு எதுவும் இல்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக அப்படியே மாறிவிட்டது.

பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சினிமா விழாக்களுக்கு யார் போய் அழைத்தாலும் வந்துவிடுகிறார் பேரரசு. அழைப்பவர்களும் சும்மா வாழ்த்திட்டு போவார் என்பதற்காக மட்டும் இவரை அழைப்பதில்லை.. விழாவில் கலந்துகொண்டு எதையாவது ஒன்றை பற்றி சர்ச்சையாக பேசுவார். அதனால் படத்துக்கு கொஞ்சம் விளம்பரம் கிடைக்குமே என்றுதான் இவரை அழைக்கிறார்கள்.

இப்படித்தான் நேற்று ஒரு இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசியவர், டக்கென தனது மெயின் மேட்டருக்கு வந்தார்.. “ஹிட்டு படம் கொடுத்துட்டா மட்டும் அவன் டைரக்டர் இல்ல.. அந்தப்படத்தால அதோட தயாரிப்பளருக்கு லாபம் வரணும்.. அவரு அடுத்து இன்னொரு படத்தை தயாரிக்க வரணும்… சும்மா நூறு நாளைக்கு மேல ஷூட்டிங் வச்சு கோடி கோடியா பணத்தை செலவழிக்க வச்சு ஹிட் கொடுத்துட்டேன்னு சொல்றவங்கள நான் டைரக்டர்னு ஏத்துக்கவே மாட்டேன்”னு சும்மா பொளந்து கட்டிட்டார்.. ஆமா அப்படி யாரை சொல்லிருப்பார்.?