இளம் இசையமைப்பாளர்களுடன் நெருக்கம் காட்டும் ‘மலர்’ கவிஞர்


பெண் கவிஞர்களில் தான் கொஞ்சம்.. இல்லையில்லை ரொம்பவே வித்தியாசமானவர் என காட்டிக்கொள்பவர்தான் அந்த மூன்றெழுத்து மலர் பெயரைக்கொண்ட பெண் கவிஞர்.. சமீபகாலமாக இவர், தான் பாட்டெழுதும் படங்களில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பெற வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளாராம்.

அதாவது இளைய இசையமைப்பாளர்களுடன் அவ்வப்போது கெட்-டுகெதர் என தனியான இடங்களுக்கு கிளம்பி விடுகிறாராம். அதுகூட அந்த இசையமைப்பாளர் திறமையானவர், அவருடைய இசையில் பாடல்கள் ஹிட்டாகும் என்று தெரிந்தால் தான் வெளியே கிளம்புவாராம். பாடல் கம்போசிங்கிலும் நேரம் காலம் பார்க்காமல் கூடவே சென்று அமர்ந்து கம்பெனி கொடுக்கிறாராம்.. இசையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘பீட்சா’ நாயகனின் பட இசையமைப்பாளர் இப்போது இவரது கஸ்டடியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.