ஹன்ஷிகாவை நடைப்பயணம் மேற்கொள்ள வைத்த மழை..!

சென்னையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை வாட்டி எடுத்துவது தெரிந்த விஷயம் தான்.. இடையில் ஓரளவு மழையும் தணிந்து தண்ணீரும் வடிய தொடங்கிய சமயத்தில், நேற்று முன் தினம் மீண்டும் ஒரு காட்டு காட்டியது. அதனால் இந்தமுறை சென்னைவாசிகள் நீண்டநாட்களுக்கு பிறகு மிகப்பெரிய ட்ராபிக் ஜாமில் சிக்கி அவதிப்பட்டனர். இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வதற்கு கூட மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகியதாம்.

இந்தநிலையில் தான் மும்பையில் இருந்து சென்னை வந்து மாலை நேரத்தில் ஏர்போர்ட்டில் இறங்கிய ஹன்ஷிகா, மீனம்பாக்கத்தில் இருந்து அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ட்ராபிக் ஜாமில் வகையாக சிக்கினார். கார் இன்ச் பை இன்ச்சாக நகர்ந்தும் சில நேரங்களில் நகராமல் அப்படியே நின்றதையும் பார்த்து பொறுமை இழந்த ஹன்ஷிகா, காரைவிட்டு ட்ராபிக் ஜாமில் இறங்கி இரண்டு, மூன்று கி.மீ தூரம் உள்ள ஹோட்டலுக்கு நடந்தே சென்றார் என்றும் சொல்லப்படுகிறது.