ரஜினியின் புதிய படத்திற்காக நெருக்கமானவர்களை ஒதுக்கி வைத்த பா.ரஞ்சித்..!


பொதுவாக சில இயக்குனர்கள் தங்களது வெற்றிப்படங்களில் நடித்த சில துணை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்களை தங்களது மற்ற படங்களிலும் தொடர்ந்து வாய்ப்பு தந்து பயன்படுத்தி கொள்வார்கள்.. விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் இதை அதிகமாக பார்க்க முடிந்தது..

அந்தவரிசையில் இயக்குனர் பா. ரஞ்சித்தும் தனது அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களில் நடித்தவர்களுக்கு ரஜினியை வைத்து தான் இயக்கிய கபாலி’ படத்திலும் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார். அவர்களும் நன்றாகவே நடித்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் தற்போது ரஜினியை வைத்து மீண்டும் தான் இயக்கவுள்ள புதிய படத்தில் தனது முந்தைய படத்தின் கலைஞர்களுக்கு அதேபோல் வாய்ப்பு தரப்போவதில்லையாம் ரஞ்சித். இதுவரை தான் இணைந்து பணிபுரிந்திராத புதுப்புது ஆட்களாக அந்தப்படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம். ஒரே ஆட்களை திரும்ப திரும்ப நடிக்க வைத்தால் முந்தைய படத்தின் சாயல் வந்துவிடும் என்கிற பயம் தான் ரஞ்சித்தின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.