சூர்யா-விக்ரமுக்கு 14 நாட்கள் மட்டுமே அவகாசம்..!  

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியில் இன்னொரு காரணமும் இருக்கிறது.

 

அதாவது ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கி வரும் எந்திரன் படத்தின் 2 ஆம் பாகமான 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென ஒரு குழப்பம் நிலவியது. 2018 ஜனவரி 26 அன்று வெளியாகும் என்ற முந்தைய அறிவிப்புக்கு மாறாக, ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என்ற வதந்தி பரவியது.

 

ஆனால் 2.0 படம் 2018 ஜனவரி 26ல் ரிலீசாவது உறுதி என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது லைகா நிறுவனம். இந்த அறிவிப்பு சூர்யா, விக்ரம் போன்ற ஹீரோக்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் தானா சேர்ந்த கூட்டம் படமும் ஸ்கெட்ச் படமும் ஜன-12ஆம் தேதியே ரிலீசானாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 நாட்களுக்குள் ஓடி கல்லா கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தம் தற்போது உருவாகிவிட்டது.