ஹன்ஷிகாவுக்கு படமும் இல்லை.. இனி சிபாரிசு செய்ய ஆளும் இல்லை..!


ஹன்ஷிகாவின் அலை ஓய்கிறதா என கேட்கும் விதமாகத்தான் இருக்கிறது அவரது பட நிலவரம்.. விக்கிபீடியாவே உதட்டை பிதுக்குகிறது.. கைவசம் ஜெயம் ரவியுடன் நடித்து வரும் போகன் மட்டுமே இருக்கிறது.. அஜித், சூர்யா இவர்களுடன் எல்லாம் இன்னும் நடிக்கவே இல்லை.. ஆனால் ஹன்ஷிகா ரிட்டையர்டு ஸ்டேஜை நோக்கி போகிறார் என்றே தோன்றுகிறது..

தற்போது இவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததற்கு காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முன் இதற்குமுன் யாவருக்கு வாய்ப்பு கிடைத்துவந்த விதத்தை பார்த்து விடுவோம். இதற்கு முன் ஹன்ஷிகா உதயநிதியுடன் மனிதன் படத்தில் நடித்தது, ஒகே ஒகே படத்தில் நடித்த நட்பின் அடிப்படையில்..

அரண்மனை-2 வில் நடித்தது சுந்தர்.சியின் ஆஸ்தான நாயகி என்கிற வகையில். ‘புலி’யில் நடித்தது விஜய்யுடன் ஏற்கனவே நடித்த நட்பில் தான். எங்கேயும் காதல் நட்பில் தான் ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் கிடைத்தது. அதன் மூலம் தான் மீண்டும் ‘போகன்’ வாய்ப்பு கிடைத்து.

ஆக ஹன்ஷிகா நடிக்கும் படங்கள் எல்லாம் ஏற்கனவே அவர் நடித்த ஹீரோக்களின் படங்களில் தான்.. அந்த நட்பில் தான்.. அதாவது சீசன்-2வுக்கான வாய்ப்புகள்.. இனி சீசன்-3யில் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.. அப்படியே கிடைத்தாலும் முன்னணி நடிகர்கள் படங்களில் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.