உதவுவது நல்ல விஷயம் தான்.. ஆனால் அதற்கு கணக்கு வைத்துக்கொள்ளலாமா லாரன்ஸ்..?


மை டியர் மார்த்தாண்டன் என ஒரு படம் வந்தது.. அதில் மன்னராக இருக்கும் எஸ்.எஸ்.சந்திரன் அவ்வப்போது ஏதாவது தத்துவங்களை உதிர்ப்பார்.. அப்போது கூடவே இருக்கும் அவரது விசுவாசி புதிய தத்துவம் 10239 என எண்ணிக்கை கூடுவதை சொல்லிக்கொண்டு இருப்பார்.. சொல்லப்போனால் லாரன்ஸ் விஷயத்திலும் இப்போது அதுதான் நடக்கிறது.

லாரன்ஸ் தனது வருமானத்தில் பெரும்பகுதியை அழைகளின் கல்வி மருத்துவம் ஆகியவற்றுக்காகவே செலவிடுகிறார் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். கடந்த மார்ச் மாதம் கூட ஒரு குழந்தையின் இருதய ஆபரேஷனுக்கு உதவினார்.. இதோ இப்போதுகூட இருதய பதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட சரண்யா என்கிற 15 வயது பெண்ணுக்கு, லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் இருதய அறுவைசிகிச்சை செய்ய உதவியுள்ளார். இப்பொழுது அந்த பெண் எழுந்து நடக்கிறார்.

இதீல்லாம் சரி.. ஆனால் ஒவ்வொருமுறையும் செய்த உதவியுடன், இது லாரன்ஸ் அவர்கள் உதவி மூலம் நடக்கும் 128வது அறுவை சிகிச்சை, இது 129 வது அறுவைசிகிச்சை என்கிற எண்ணிக்கை கணக்கையும் சொல்லி வருவது செய்த உதவியை பகட்டாக விளம்பரப்படுத்துவது போல உள்ளது. லாரன்ஸுக்கு பெருமை சேர்க்கிறேன் என அவரது அடிப்பொடிகள் செய்யும் இந்த வேலை அவர் மீது எரிச்சலையே ஏற்படுத்தும். லாரன்ஸ் கவனித்து இந்த விளம்பர நோக்கிலான செய்தியை தவிர்த்தல் வேண்டும் என்கிறார்கள் லாரன்ஸ் மீது மரியாதை வைத்துள்ள ரசிகர்கள்.