“எனக்கு பிரியாணி வேணாம்.. கஞ்சியே போதும்” ; ‘சண்டக்கோழி’ நடிகை வருத்தம்..!


‘சண்டக்கோழி’ நாயகி மீரா ஜாஸ்மினுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு தனியிடம் உண்டு. திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுன்ஞநிலையில் தான் இருக்கிறார் மீரா.. ஆனால் சில நாட்களாக தனது கணவரை விவாகரத்து செய்யபோகிறார் என்கிற செய்தி அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இன்னொரு பக்கம் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மீரா ஜாஸ்மின்.. ஆனாலும் வழக்கம்போல கிளாமராக நடிக்கமாட்டேன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன் என்கிற கண்டிசனையும் முன் வைக்கிறாராம்.

அதனால் மீராவை தேடி ஆவலாக கதை சொல்ல வரும் இயக்குனர்கள் இந்த கண்டிஷன்களால் ஜகா வாங்குகிறார்களாம். இது பற்றி சமீபத்தில் மீரா ஜாஸ்மினிடம் கேட்டால் “சிலருக்கு பிரியாணி பிடிக்கும்.. சாப்பிடுகிறார்கள்.. ஆனால் எனக்கு கஞ்சியும் பயறும் தான் பிடித்திருக்கிறது.. அதற்காக என்னை பார்த்து அடடா உனக்கு பிரியாணி கிடைக்கவில்லையே என ஏன் வருத்தப்படுகிறீர்கள்.. படங்களில் நடிப்பதும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதும் அவரவர் விருப்பம்” என்கிறாராம் கூலாக.