பாலுமகேந்திரா என்னை செருப்பால் அடித்திருப்பார் ; பதறிய இயக்குனர்..!


மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றி இயக்குனர்களான பாலா, வெற்றிமாறன், ராம் போன்ற இயக்குனர்களை நமக்கு தெரியும்.. அவர்கள் தங்களது குருநாதரின் பாணியை பின்பற்றியே எப்படிப்பட்ட படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரியும்.

ஆனால் பாலுமகேந்திரா ஆரம்பித்து நடத்திவந்த ‘சினிமா பட்டறை’ என்கிற பயிற்சி பள்ளியில் பயின்று முதல் மாணவனாக வெளிவந்து ‘தப்பு தண்டா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகண்டன்..ஆனால் தனது குருநாதரை போல அல்லாமல், கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளார் ஸ்ரீகண்டன்..

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசும்போது, “இந்தப்படம் முழுக்க கமர்ஷியலாக எடுத்துள்ளேன்.. இந்நேரம் என் குருநாதர் பாலுமகேந்திரா சார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை எடுத்ததற்காக என்னை செருப்பால் அடித்திருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் தான் இந்தப்படத்தை எடுத்தேன்” என கூறினார்.