ரேகாவிற்கு லிப்கிஸ் கொடுக்க முயற்சித்ததை பகிரங்கப்படுத்திய பவர்ஸ்டார்..!

இன்றைக்கு எல்லா நடிகர்களின் ரசிகர்களும் சேர்ந்து ஒரே ஒருவருக்கு ரசிகராக முடியும் என்றால் அது பவர்ஸ்டார் சீனிவாசன் தான். இன்று சினிமாவில் பிரபலமாக இருக்கும் அவருக்கு பல நடிகைகளே ரசிகைகளாக இருந்தாலும், சினிமாவில் அறிமுகமான புதிதில் ரிடையர்டு ஆன சீனியர் நடிகைகளுடன் நடிப்பதே மிகப்பெரிய பவருக்கு கனவாக இருந்தது.

அவர் கோடி கோடியாக பணத்துடன் சினிமாவுக்குள் எண்ட்ரியான நேரம், தான் நடித்த ‘இந்திரசேனா’ என்கிற படத்தில் தனக்கு ஜோடியாக எந்த ஹீரோயினையாவது பணத்தால் வளைத்துவிடலாம் என்று பார்த்தார்.. முடியவில்லை. மலையாள நடிகை வாணி விஸ்வநாத்தை அப்ரோச் பண்ணினார். அவரோ மிரண்டுபோய் வாசலை சாத்தினார்.

அப்போது பவரிடம் யாரோ ஒரு புண்ணியவான் வந்து, கடலோர கவிதைகள் படத்தில் நடித்த ரேகா இருக்கிறார், கேட்டு பார்க்கவா என சொல்ல பவருக்கோ ஆனந்தம்.. காரணம் ரஜினியுடனோ அல்லது கமலுடனோ நடித்த ஹீரோயின் யாராக இருந்தாலும் எவ்வளவு சீனியராக இருந்தாலும் ஜோடி சேர பவர் தயாராக இருந்தார்.

இந்தப்படத்திற்காக பவர்ஸ்டார், ரேகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டபோது, பவரின் இதயத்தில் ரேகா தலை சாய்ப்பது போன்ற காட்சியில் பவரின் இதயம் பலமடங்கு துடித்ததாக ரேகாவே சொன்னாராம். இதாவது பரவாயில்லை.. புன்னகை மன்னனில் கமலுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்தது போல தன்னுடன் லிப் கிஸ் காட்சியில் ரேகா நடிப்பாரா என்கிற நப்பாசையும் பவருக்கு இருந்ததாம்.

இதற்காவே மழைக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ரேகாவுடன் கிளாமராகவெல்லாம் டூயட் பாடி நடித்த பவருக்கு, கடைசி வரை ரேகா முத்தம் கொடுக்கவே இல்லையாம். அதனாலேயே அந்தப்படத்தை ரிலீஸ் பண்ணாமல் பெட்டிக்குள்ளேயே போட்டுவிட்டேன் என்கிறார் பவஸ்டார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ரேகாவை முத்தமிட முயன்றதை ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த ‘மாங்கா’ இசை வெளியீட்டு விழா அரங்கில் சம்பந்தப்பட்ட ரேகா பக்கத்தில் அமர்ந்திருக்க பவர்ஸ்டார் சொன்னது தான் ஹைலைட்.. பின்னே.. பவர்னா சும்மாவா..?

பின்குறிப்பு : நான் எது சொன்னாலும் என்னை பத்தி தப்பா கிசுகிசு வருதுன்னு பவர் ரொம்பவே வருத்தப்பட்டார். அதனால் கிசுகிசுவாக இல்லாமல் கிசுகிசுவையும் மிஞ்சும் ரேஞ்சுக்கு அவரது கிளுகிளுப்பான ஸ்டேட்மென்ட்டையே போட்டுவிட்டோம்.