நடிகர்சங்க கணக்கு விவகாரத்தில் மீண்டும் சரத்குமார் ‘போங்கு’ ஆட்டம்..!


திரும்பவும் நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறார்.. நடிகர்சங்கத்தின் கடந்த மூன்று வருட கணக்குகளை அவர் கொடுக்கவே இல்லை.. கடந்த ஒரு கணக்கைத்தான் ஒப்படைத்து இருக்கிறார்.. அப்படி ஒப்படைத்தது கூட டுபாக்கூர் கணக்கு தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது..

பின்னே..நூறு பேருக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கியதாக கணக்கு காட்டினால் அதற்கான பில் இருக்கவேண்டும் தானே..? ஆனால் அவரோ எந்த ஒரு செலவிற்கும் ரசீது இல்லாமல், செலவு செய்த விபரத்தையும் தொகையையும் மட்டும் பேப்பர் அறிக்கையாக கொடுத்துள்ளாராம்..

இதை வைத்துக்கொண்டு எப்படி தணிக்கை செய்வது என குழம்பும் நிர்வாகிகள், முறையான கணக்குகளை மீண்டும் ஒப்படைக்க சொல்லி, சரத்குமார் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்களாம்.