என் தந்தை படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் – விஷால் !!!

என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன் – விஷால் !!!

பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது,

இந்த அணி இங்கு வந்திருப்பதரக்கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நளிந்து என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தான் நான் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இந்த அணி சார்பாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு தலைவர் என்ற விஷயம் எப்போது நியாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும் தான் நியாபகம் வரும் மற்றபடி எனக்கு அது நியாபகம் வராது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்ற தான் வந்துள்ளேன் தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை. திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும். முன்பெல்லாம் என்னுடைய தந்தையை என்னுடைய படத்தை பார்க்கத்தான் அழைப்பேன். இப்போது நான் அவரிடம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசுவேன். நல்லது பண்ண போகிறேன் என்பேன். அதே போல் இப்போது நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இனைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம். அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டிட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும். என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று கேட்டார் ?? … என்னுடைய தந்தை “ ஐ லவ் இந்தியா “ என்ற படத்தை எடுத்தார். என் தந்தை மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு Lab யில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம். என்னுடைய தந்தை நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது இனிமேல். நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய் , உன்னை எதிர்த்து நிற்ப்பது எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் , நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர் , தெலுங்குவிலும் உறுப்பினர். நீ இந்த தேர்தலில் நிற்கிறாய் என்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை அளிக்க வேண்டாம். இதை செய்தால் நீ நம் வீட்டிற்கு வா அல்லது , வராதே என்றார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன். எங்களுடைய வாக்குறுதிகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் எங்கள் அணி சார்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கும் எஸ்.ஆர்.பிரபு கூறுவார் என்றார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியின் வாக்குறுதிகள் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மேடையில் கூறியவை,

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் – வாக்குறுதிகள்
· வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்

· அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்

· பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்

· சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்

· நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்

· அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் மூலமாகவே நிறை வேற்றப்படும்

· யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகை ரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்

· தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்

· பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்

· சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்

· முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்

· ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் அனைத்து நிர்வாகிகளும் . இல்லையேல் ராஜினாமா செய்துவிடுவோம்