பரத்துக்கு இனியாவால் ஏற்பட்ட சங்கடம்..!


நடிகர் பரத்துக்கு கைவசம் இரண்டே படங்கள் தான் இருக்கின்றன. அதில் அவர் ரொம்பவே நம்பியிருப்பது சௌகார்பேட்டை இயக்குனர் வி.சி.வடிவுடையான் டைரக்சனில் தான் நடித்துவரும் பொட்டு படத்தை தான்… காரணம் இன்றைக்கு ஈசியாக பிஸினஸ் ஆகக்கூடிய வகையில் பேய்ப்படமாக இது உருவாகி வருகிறது..

இந்தப்படத்தில் நடிகை இனியா பேயாக நடிக்கிறாராம். அப்பாவியான பரத் மீது அவர் புகுந்துகொள்ள, பரத் பேய் பிடித்த ஆக்ரோஷமான நபராக மாறுகிறாராம். இதையெல்லாம் பக்காவாக செய்துவிட்ட பரத்துக்கு ஒரே ஒரு சங்கடம் இனியாவால் ஏற்பட்டதாம்.

அதாவது இனியா பேயாக பரத்தின் உடலுக்குள் புகுந்தபின், பரத்தின் நடை உடை பாவனைகள் எல்லாம் இனியாவைப்போலவே இருக்கவேண்டும் என டைரக்டர் சொல்லிவிட்டாராம். இதனால் இனியாவை அடிக்கடி உத்துப்பார்த்து, அவரின் மேனரிசங்களை பாலோ பண்ணி ஒருவழியாக நடித்தும் விட்டாராம். பேயாக நடிப்பதைவிட இனியா போல நடிப்பதில் தான் பரத்துக்கு ட்ரில் வந்கிவிட்டதம்.