சாலிகிராமம் மக்களை சங்கடப்பட வைத்த ஷங்கர்..!


ஷங்கர் படத்தின் ஷூட்டிங் எங்கே நடக்கிறதோ, அந்தப்பகுதியின் மக்கள் சங்கடங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆஹா, ஷங்கர் படமாச்சே, ரஜினி நடிக்கிறாரே என்று சந்தோஷமெல்லாம் படமுடியாது.. காரம் ஒரு பக்கம் போலீஸ் பாதுகாப்பு கெடுபிடி.. இன்னொரு பக்கம் ஷூட்டிங்கால் ஏற்படும் ட்ராபிக் நெரிசல்..

ஆனால் இந்தமுறை சாலிகிராம பகுதியில் ஸ்டுடியோ ஒன்றில் கடந்த சில நாட்களாக ஷங்கர் இயக்கிவரும் ‘2.O’ படப்பிடிப்பால் வேறுவிதமான புதிய சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.. ஷங்கர் படமாக்கியது ஒரு கண்டெய்னர் வெடித்து சிதறும் காட்சியை. இது இயற்கையாக இருக்கவேண்டும் என்பதால் தத்ரூபமாக படமாக்கப்பட்டதாம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு இருந்ததால், எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றாலும், மிகப்பெரிய அளவில் கேட்ட வெடிச்சத்தமும் அதனால் எழுந்த புகை மண்டலத்தால் ஏற்பட்ட சுவாசப்பாதிப்பும் சாலிகிராம மக்களை சிரமப்பட வைத்துவிட்டனவாம்.