உதவி செய்வதாக நினைத்து மேனேஜரை கதறவைத்த த்ரிஷா..!


உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. உதவி செய்கிறேன் என்கிற பெயரில் உபத்திரவம் தரக்கூடாது என்று சொல்வார்கள்.. நடிகை த்ரிஷா விஷயத்தில் இது சரியாக பொருந்தும். த்ரிஷாவின் மேனேஜராக இருந்தவருக்கு திடீரென படம் தயாரித்து தயாரிப்பாளராக ஆகவேண்டும் என ஆசை வந்தது..

நமிடம் தான் த்ரிஷா என்கிற ஹீரோயின் கைவசம் இருக்கிறாரே என நினைத்தவர், அதற்கேற்ற மாதிரி கதையுடன் வந்த இயக்குனர் ஒருவரை வைத்து, த்ரிஷாவை ஹீரோயினாக்கி நாயகி’ என்கிற படத்தை ஆரம்பித்தார்.. பட பூஜைக்கு அமர்க்களமாக வந்து கலந்துகொண்ட த்ரிஷா, படப்பிடிப்புக்கு இழுபறியாகவே வந்து நடித்து கொடுத்தாராம்.

தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகியதால், தெலுங்கில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா, மற்ற புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லையாம். இத்தனைக்கும் த்ரிஷாவின் மேனேஜரான தனக்கே இந்தா நிலைமையா என மனதில் கொந்தளித்த தயாரிப்பாளர், ஒருவழியாக கடந்த வெள்ளியன்று தெலுங்கில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்தாராம்.

ஆனால் படமோ பப்படம் ஆகிவிட்டது.. போட்ட காசாவது வருமா என்பதும் சந்தேகம் தான். தெலுங்கிலேயே படம் படுத்துவிட்டதால், தமிழில் ரிலீஸ் செய்வது எப்படி என நொந்துபோய் இருகிறாராம் தயாரிப்பளார்.. ஹீரோ என யாரும் பெரிய அளவில் இல்லாதநிலையில் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்த த்ரிஷா, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தை கொஞ்சம் விளம்பரப்படுத்தி இருந்தால், ஓரளவாவது படம் தப்பித்திருக்கும் என்கிறார்கள்..