சிம்பு இப்படி செய்வார் என எதிர்பார்க்காத இயக்குனர்..!


சிம்பு என்றாலே அவர் எது செய்தாலும் பேசினாலும் சர்ச்சை என்று சொல்வதை விட, அவருடைய சர்ச்சையான செயல்பாடுகள் மட்டுமே வெளியில் உள்ளவர்களுக்கு தெரியவருகிறது என்று சொல்வதுதான் மிகப்பொருத்தமாக இருக்கும்.. ஆனால் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் வெளியே தெரிவதே இல்லை.. அவரும் தெரிய அனுமதிப்பதில்லை என்பதே உண்மை..

சமீபத்தில் இயக்குனர் நந்தகுமார் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்த அவரது மனைவியை வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஒரு லட்ச ரூபாய் செலுத்த முடியாமல் தவித்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட சிம்பு, ஆள் அனுப்பி ஒரே பேமன்ட்டாக மருத்துவமனைக்கு செட்டில் செய்து நந்தகுமாருக்கு உதவியுள்ளாராம்.

உதவி செய்து இருக்கட்டும்.. யாருக்கு உதவி செய்தார் என்பதுதான் ஹைலைட்டே.. சில வருடங்களுக்கு முன் சிம்புவை வைத்து ‘கேட்டவன்’ என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த நந்தகுமார். படம் இருபது சதவீதம் வளர்ந்திருந்த நிலையில் சிம்புவுக்கும் நந்தகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் ட்ராப் ஆனது..

அதன்பின் பல பேட்டிகளில் சிம்புவை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியவர்தான் இந்த நந்தகுமார்.. ஆனால் இன்று அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் தகவல் கேள்விப்பட்டதும் அடுத்த நிமிடமே தனக்கு சிம்பு உதவி செய்ததை பார்த்து ஆடிப்போனாராம் நந்தகுமார். அவர் மூலமாகத்தான் சிம்பு செய்த இந்த உதவி வெளியே தெரியவந்துள்ளது.