சைக்கிள் கேப்புல ஆட்டோ, இல்லை.. லாரியை ஓட்டும் சூரி ..


வைகைப்புயலின் வீச்சு குறைந்த தமிழ் சினிமாவில் பதறுகள் எல்லாம் அடித்து வரப்பட்டு சமீப காலமாக காமடி செய்கிறோம் என்கிற பெயரில் படம் பார்க்கிரவங்களை தலையை சொரியவிடுவது நடைபெற்று வருகிறது ..

எதோ வடிவேலு இல்லாத குறையை இந்த சந்தானம் ஏதோ கொஞ்சமா போக்கி வந்தார் …. ஆசை யாரை விட்டது எல்லோரும் போல ஹீரோ ஆசை வந்து தன தலைமேல தானே மண்ணை அள்ளி போட்டுகிட்டார் .. அதிக சம்பளம் ,டேட்ஸ் இல்லை , இப்படி பல காரணங்களுக்காக ஏற்கனவே சந்தானத்தால் அல்லோல்பட்ட தயாரிப்புகளுக்கு சூரியின் வரவு கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தது

அப்படியே மொத்தமாக சந்தானத்தை மறந்து விட்டார்கள் , தயாரிப்பு நிறுவங்கள் தான் மறந்தது , நண்பர்கள் மறக்கமாட்டார்கள் என்று இருந்தவருக்கு எந்த நண்பரிடமிருந்து நடிக்க அழைப்பு வரவில்லையாம் ஏன் சந்தானத்தால் ஹிட் அடித்து இன்று நடிகராக இருக்கும் உதயநிதியே மறந்துவிட்டாராம்
தனது அடுத்த படத்தில் சூரிதான் நடிக்கிறாராம் …

“வடிவேலும் இல்ல , சந்தானமும் இல்ல கிடைச்ச கேப்புல அப்பிடியே டாப் கியரை போட்டு தூக்கிரணும் ” என்று அசுரவேகத்தில் போகும் சூரி படப்பிடிப்பு தளத்தில் முதலில் கொஞ்சம் பணிவு காட்டியவர் இப்போது கொஞ்சம் பிகு பண்ண ஆரம்பித்து இருக்கிறாராம் ..

நடிகைகள் போல தனி கேரவேன் , ஒரு நாளைக்கு பத்து பதினஞ்சு பழ ரசங்கள் என்று மும்பை நடிகைகளுக்கே சவால் விடுகிறாராம் ..

“காற்றுள்ள போதே துற்றிகொள்” .. இது பழமொழி …

“சைக்கிள் கேப்புல லாரியை ஓட்டு” இது சூரியின் புது மொழி ..