திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை டாப்சி


ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம் ஒன்றில் இணைந்துள்ளார்.

தனது காதல் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவரும் இல்லை. வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.

திருமண பந்தத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். திருமண வைபவம் ஒரேநாளில் நடக்க வேண்டும். நிறைய நாட்கள் அதை நடத்தக்கூடாது. இதற்கு மேல் திருமணத்தை பற்றி என்னால் விவரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.