போலீசில் புகார் ; சரத்குமார் – ராதாரவி தலைக்கு மேல் தொங்கும் கத்தி..!


என்ன தைரியத்தில் சரத்குமாரும் ராதாரவியும் இவ்வளவு தைரியமாக இருக்கிறார்கள் என்பது புரியாமல் குழம்பி கிடக்கிறார்கள் இப்போது நடிகர்சங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள். காரணம் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க சொல்லி மூம்று மாதம் கேடு கொடுத்தும் கூட இந்த இருவரும் அதை கொஞ்சம் கூட சட்டை பண்ணியதாக தெரியவில்லை..

இதனால் சங்க கனகுகளின் தணிக்கையை முடித்துவிட்டு அதன்பின் இந்த இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என நடிகர்சங்க செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளதாம். அதன் முதல்படியாக இன்னும் சில தினங்களில் சரத்குமார் மீது போலீசில் புகார் கொடுக்க இருக்கிறார்கள்.. சரத்குமார் – ராதாரவி இருவரும் தலைக்கு மேல் தொங்கும் இந்த கத்தியில் இருந்து தப்பிக்க போகிறார்களோ தெரியவில்லை..