பாண்டிராஜின் மதிப்பு இப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததா..?


கடைக்குட்டி சிங்கம் படத்தின் மிக பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கூட்டணியை பார்க்கும்போது இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்பது நன்றாகவே தெரிகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அதாவது சிவகார்த்திகேயன் ரஜினி முருகன், ரெமோ என்கிற ஹிட்டுகளை கொடுத்த சமயத்தில் இயக்குனர் பாண்டிராஜிடம் நீங்கள் ஏன் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் இயக்கவில்லை என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த பாண்டிராஜ் சிவகார்த்திகேயன் எங்கேயோ உயரத்திற்கு போய்விட்டார் சம்பளமாக பத்துவிரலுக்கு மேலே காட்டுகிறார் அந்த அளவுக்கு சம்பளம் கொடுத்து படம் எடுக்க நமக்கு கட்டுபடியாகாது என்று கொஞ்சம் விரக்தியான மனநிலையில் கூறினார்.

இத்தனைக்கும் சிவகார்த்திகேயனை தனது மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி திரையுலகில் ஒரு விலாசம் கொடுத்தவர் பாண்டிராஜ் தான். ஆனாலும் சிவகார்த்திகேயன் புகழின் உச்சிக்கு ஏற ஏற தன்னை அறிமுகப்படுத்தியவரையே அந்த சமயத்தில் உதாசீனப்படுத்தினார் என்பதே உண்மை.

தற்போது சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் சரிவை சந்தித்து வரும் நிலையில், பாண்டிராஜ் கடைக்குட்டி சிங்கம் மூலம் வெற்றி ஏணியில் ஏற ஆரம்பித்துள்ளார். இந்த சமயத்தில்தான் பழசை எல்லாம் மறந்து தனக்கும் ஒரு படம் பண்ணி தருமாறு பாண்டிராஜிடம் மனம்விட்டு கேட்டே விட்டாராம் சிவகார்த்திகேயன்.

சன் பிக்சர்ஸுக்கு பாண்டிராஜ் படம் பண்ணித் தருவதாக சொல்லி இருந்த நிலையில் அந்த படத்தையே சிவகார்த்திகேயன் வைத்து தற்போது இயக்க உள்ளாராம் பாண்டிராஜ். இப்போதாவது தனது குருநாதரின் அருமை சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்தது சந்தோஷம் தான்