தனி ஒருவனாக சுமையை ஏற்க தயங்கும் மோகன்ராஜா


மோகன்ராஜா-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்கள்.. முதல் பாகத்தை தயாரித்த ஏஜி எஸ் நிறுவனமே இந்தப்படத்தையும் தயாரிக்கும் என சொல்லப்பட்டு வருகிறது. அந்த நிறுவனமும் இந்தப்படத்தை தயாரிக்க தயார் நிலையில் தான் இருக்கிறது.

ஆனால் அவர்கள் போட்ட ஒரு கண்டிஷனால் தான் இயக்குனர் ராஜா ரொம்பவே யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். அதாவது இந்தப்படத்தின் பட்ஜெட் என்னவென்று சொல்லிவிட்டு, அதை பர்ஸ்ட் காபி அடிப்படையில் மோகன்ராஜாவே தயாரிக்கட்டும் என சொல்லிவிட்டார்களாம் ஏஜி.எஸ்.

அதற்கு காரணமும் இருக்கிறதாம். அதாவது தனி ஒருவன் படம் எடுத்தபோது, மோகன்ராஜா, இஷ்டத்துக்கு செலவு இழுத்து விட்டாராம்.. அதனால் சொன்ன பட்ஜெட்டை விட கணக்கு எகிறிவிட்ட்டதாம். படம் வெற்றியடைந்து லாபம் பார்த்தாலும், மோகன்ராஜா அதிக செலவை இழுத்துவிட்டதில் ஏஜி எஸ் நிறுவனத்துக்கு வருத்தமாம்.

அதனால் தான் தனி ஒருவன்-2 படத்தை பர்ஸ்ட் காபி அடிப்படையில் மோகன்ராஜாவையே தயாரிக்க சொல்லிவிட்டால், அவர் அதற்குள்ளாகவே முடித்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் அவரது கைக்காசை போட்டு எடுக்கவேண்டிய சூழல் உருவாகும்..

ஆனால் இதை மோகன்ராஜா விரும்பவில்லை. அதனால் தான் இன்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் இந்த டீலுக்கு சம்மதம் சொல்லாமல் மௌனம் சாதித்து வருகிறாராம்.