“இன்னும் பத்து வருஷத்துக்கு படம் இயக்காதீர்கள்” ; தனுஷிடம் ரஜினி சொன்னது எதனால்..?


முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ‘ப.பாண்டி’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை. சில தினங்களுக்கு முன் தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில், ரஜினிக்கு போட்டுக் காட்டினாராம் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு தலைவர் என்ன சொல்வாரோ என நகம் கடித்து வெளியில் காத்திருந்தாராம் தனுஷ்.

படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரஜினி தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, “இன்னும் 10 வருஷத்துக்கு வேறு படத்தை இயக்காதீர்கள். இந்தப் படமே பல வருடங்கள் உங்கள் பேரைச் சொல்லும்” என்றும் சொன்னாராம். இது உண்மையிலேயே பாராட்டுதான்.. நிச்சயமாக வஞ்சப்புகழ்ச்சி இல்லை என நம்புவோம்.