டைரக்டர் பாலா எப்படி இதற்கு ஒப்புக்கொண்டார்..!


பொதுவாக தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் இருந்த சூர்யா, ஆர்யா, அதர்வா பாலாவின் படத்தில் நடித்தபின் தானே தங்களது புதிய இன்னிங்சை ஆரம்பித்தனர். அவ்வளவு ஏன், நடிகர் விக்ரம் கூட சினிமாவில் அறிமுகமாகி சாதாரண ஒரு ஹீரோவாகவே சில வருடங்களை கடத்திய நிலையில், பாலாவின் ‘சேது’ மூலம் தானே ஒரு புது அவதாரம் எடுத்தார்.

அதுதான் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாகவும் அமைந்தது. இப்போது தனது மகனையும் பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்துவது சரியான நேரத்தில் விக்ரம் எடுத்துள்ள மிகச்சரியான முடிவு என்றே சொல்லலாம். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இது உருவாகிறது என்பது நமக்கு தெரியும்.

ஆனால் அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இதுவரை தனக்கு மனதில் தோன்றிய, தன்னை பாதித்த கதைகளை மட்டுமே படமாக இயக்கிவந்த பாலா, முதன்முறையாக விக்ரம் மகனுக்காக தனது கொள்கையை தளர்த்திக்கொண்டுள்ளார் என்பது மிகப்பெரிய விஷயம் தான்.