மணிரத்னம் படத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள தொழிற்சாலை அதிபர்கள்….!


காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் அடுத்து இயக்கி வரும் செக்சச் சிவந்த வானம். அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் உள்பட பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

தொழிற்சாலை கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதும், மக்கள் நோய்களால் பாதிக்கபடுவதுமான பின்னணியில் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள மூடப்பட்ட தொழிற்சாலைகளில் நடந்து வருகிறது.

பொதுவாகவே மணிரத்னம் படத்தில் இடம்பெறும் சமூக பிரச்சனைகள் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது நமக்கு தெரியும். அந்தவகையில் தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாடு, கழிவுகள் வெளியேற்றும் விவகாரம் ஆகியவை விவசாயம் அற்றும் பொதுமக்களை எப்படி பாதிகின்றன என்பதை விலாவரியாக சொல்ல இருப்பதால், இப்படிப்பட்ட முறைகேடுகளை செய்துவரும் பல தொழிலதிபர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனராம்.