“இன்னொரு சான்ஸ் தருவீர்களா..? ; இயக்குனரிடம் கோரிக்கை வைத்த ஜெய்..!


வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என ஒரு பழமொழி சொல்லப்படுவதை கேட்டிருப்பீர்கள்.. அந்த லிஸ்ட்டில் ஜெய்யை வைத்து படம் எடுத்து ரிலீஸ் செய்து பார் என்கிற வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ஜெய்யின் வீரதீர பராக்கிரமங்கள் ஊருக்கே தெரியும். ஜெய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அனைவரும் ஆளைவிட்டால் போதுமடா சாமி என பின்னங்கால் பிடரியில் பட ஓடியது கண்கூடான வரலாறு..

இதில் அவரை வைத்து இரண்டாவது முறையாகவும் படம் எடுத்த ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனிடம் ‘வலியவன்’ படத்தில் ஜெய்யால் சந்தித்த கசப்பான அனுபவங்களை பற்றி கேட்டால் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு தனது குமுறலை கொட்டுவார்..

சரி. விஷயத்துக்கு வருவோம்.. அப்படிப்பட்ட ஜெய், தன்னை வைத்து இயக்கிய இயக்குனரிடம் இன்னொரு படமும் என்னை வைத்து இயக்குங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா..?

உண்மைதான்.. அவர் தான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படஹ்தின் இயக்குனரான மகேந்திரன் ராஜாமணி.. “இந்த படத்தின் இயக்குனர், கண்டிப்பாக, மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். அவரது இரண்டாவது படத்திலும், வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன்” என ஜெய்எ கூறியுள்ளார் என்றால் அது ஆச்சர்யம் தான்.