இந்த வருடம் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஜெயம் தான்..!


இந்த வருடத்தில் மொத்தம் நான்கு படங்களில் நடித்த ஜெயம் ரவி, அதில் இரண்டு காதல் கமர்ஷியல், இரண்டு ஆக்சன் என ஏரியா பிரித்திருந்தார்.. லேட்டஸ்டாக வெளியான பூலோகம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது…

இதுபற்றி ஜெயம் ரவி கூறும்போது, “இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போதே நாங்கள் இது வெற்றி பெரும் என்று கணித்தோம். ஒரு குத்து சண்டை வீரராக தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன். கதாபாத்திரத்திற்காக உழைப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய உழைப்பு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..

இந்த வருடத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற தனது குடும்பமும் ஒரு கரணம் என குறிப்பிட்டார் ஜெயம் ரவி. மேலும் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘மிருதன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, பிரபுதேவா தயாரிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.