“காயத்ரி ரொம்பதான் பண்ணுறா” ; கொதிக்கும் சித்தி..!


பிக் பாஸ் வீட்டில் காயத்ரி, ஜூலி இருவர்தான் பார்வையாளர்களில் வெறுப்பை சம்பாதித்தவர்களில் முதல் இரு இடங்களில் இருந்தவர்கள். ஜூலி சரியான பச்சோந்தி ரகம்.. இதோ இப்போது அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்..

சரி இதை பார்த்தாவது காயத்ரியின் அடாவடியும் அதிகாரமும் குறைந்திருக்கிறதா என்றால் கமலையே குற்றம் சொல்லும் அளவுக்கு இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.. ஆனால் காயத்ரியின் உண்மையான முகம் இதுவல்ல என்கிறார் அவரது சித்தியும் நடன இயக்குனருமான கலா மாஸ்டர்.

“பொதுவா காயத்ரி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதிலிருந்து அவளோட இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அவ பண்றது எல்லாம் தப்பு மேல தப்பா இருக்கு… காயத்ரி வீட்டுக்கு வந்தா நான் கண்டிப்பா பேச மாட்டேன். ஏன்னா அவ நான் பார்த்த பொண்ணு இல்ல. எங்க வீட்டுல இல்லாத ஒரு பொண்ணாதான் அவளை நான் பார்க்கிறேன். சொன்னா நம்ப மாட்டீங்க. கடந்த ஒரு மாசமா பிக் பாஸ் காயத்ரியைப் பார்த்து இவளா நம்ம பொண்ணுனு மனசுக்குள்ள கேட்டுட்டே இருக்கேன்” என தனது குமுறலை வெளிபடுத்தியுள்ளார் கலா மாஸ்டர்