வரைமுறை மீறிய மிஷ்கினின் மேடை பேச்சு


பொது மேடைகளில் எளிதாக உணர்ச்சி வசப்பட்டு விடுபவர் இயக்குனர் மிஷ்கின்.. அதனால் தானோ என்னவோ எப்போதுமே கருப்பு கண்ணாடி அணிந்து தனது உணர்வுகளை மறைத்துக்கொள்வார்.. ஆனால் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு, பேசும் வார்த்தைகளில் கோட்டைவிட்டு விடுவார். நேற்று முன் தினம் நடைபெற்ற பேரன்பு பட இசைவெளியீட்டு விழாவிலும் ‘ரேப்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மிஷ்கின்.

இந்த விழாவில் .மம்முட்டியை புகழ்வதாக நினைத்துக்கொண்டு, “மம்முட்டி மட்டும் இந்நேரம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவரை நான் காதலித்திருப்பேன்.. இல்லையென்றால் ரேப் பண்ணியிருப்பேன்” என கூறியது பெண்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஷ்கினுக்கு சமூக வலைத்தளங்களில் பெண்கள் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோக மம்முட்டியின் ரசிகர்களும் மிஷ்கினின் இந்த சீப்பான புகழ் வார்த்தைகளை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதையும் சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது