சமந்தாவை கடுப்பேற்றிய வருங்கால மாமனார்..!


இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் அது அந்தப்படத்தின் இயக்குனருக்கு மட்டுமல்ல, படக்குழுவினாருக்கே மிகப்பெரிய தலைவலிதான். அப்படித்தான் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் கதாநாயகியாக நடித்த சமந்தாவிடம் அந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் ஆடிவிட்டு சென்ற காஜல் அகர்வாலை பற்றி கேட்டபோது, “அவர் ஒரு ஐட்டம் டான்ஸ் பண்ணியிருக்கிறார்.. அவரைப்பற்றி வேறென்ன சொல்ல..?” என்று விட்டேத்தியாக பதிலளித்தார்.

இந்த ஈகோ யுத்தம் 2010ல் ‘பிருந்தாவனம்’ படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோதே தொடங்கிவிட்டதாம். பிரமோத்சவம் படத்தில் காஜல் நடித்ததாலேயே அவர் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்டபோது, தான் வருவதற்கு ரொம்பவே தாமதப்படுத்தினாராம் சமந்தா. ‘ராமய்யா வஸ்தாவய்யா’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தபோதும் இப்படி ஒரு புகார் சமந்தா மீது கிளம்பியது.

இப்போது தனது மாமனார் நாகார்ஜுனா கேட்டுக்கொண்டார் என்பதற்காக அவர் நடித்துவரும் ‘ராஜூ கரி காதி’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இந்தநிலையில் திடீரென சஸ்பென்ஸ் என்ட்ரி ஆக, இந்தப்படத்தில் காஜல் அகர்வால் சற்று கூடுதலாக நீட்டிக்கப்பட்ட காட்சிகளுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.. அவ்வளவுதான் இந்த செய்தி தெரியவந்ததும் சமந்தா அப்செட் ஆகிவிட்டாராம். அனேகமாக இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்ளமாட்டார் என்று கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் சமந்தா அப்படியெல்லாம் செய்யமாட்டார். என்ன இருந்தாலும் அவரது வருங்கால மாமனாரின் சங்கடத்துக்கு ஆளாகிவிட கூடாது என சமந்தாவுக்கு தெரியாதா என்ன என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.